களியக்காவிளை, மார்ச் 5 –
அதங்கோடு, ஆனந்தநகர், மாயா கிருஷ்ண சுவாமி கோயில் 9-ம் திருவிழாவாகிய இன்று சுவாமி பவனி நடந்தது.
ஆனந்தநகர், மாயா கிருஷ்ணசுவாமி கோயில் 101வது ரோகிணி திருவிழா பிப்ரவரி 25ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருவிழாவாகிய இன்று காலை சந்தன குடம் நேர்ச்சை, சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசுவாமியும், அலங்கார வாகனங்களில் ஶ்ரீ சாமுண்டீஸ்வரி தேவி, புவனேஷ்வரி தேவியும் பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி பவனியில் முத்துக்குடை அணி வகுப்பு, செண்டை மேளம், சிங்காரி மேளம், யானை, குதிரைகள், விளக்கு கெட்டுகள், பூ காவடி, அலங்கார ரதங்கள், உள்ளிடவை இடம் பெற்றது. கோயிலில் இருந்து துவங்கிய சுவாமி பவனி ஆனந்த நகர், தேவி நகர், பாஞ்சிவிளை, படந்தாலுமுடு, குழித்துறை, கநச்சிவிளை வழியாக கோயில் வந்தடைந்தது.
தொடர்ந்து வானவேடிக்கை நடந்தது. 10-ம் திருவிழாவாகிய நாளை காலை அபிஷேக உறியடி, திரு ஆறாட்டு, திருக்கொடியிறக்குதலுடன் இவ்வருட திருவிழா நிறைவடையும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.



