தஞ்சாவூர், ஜூன் 11 –
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் 1435 ஆம் பசிலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் ரேவதி, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலையில் குடிகள் மாநாடு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் , கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீர்வாயத்தில் பேராவூரணி வட்டத்தைச் சார்ந்த பேராவூரணி உள் வட்டத்தில் வருவாய் கிராமமான பின்னவாசல், ஆதனூர், நாட்டாணிக் கோட்டை, மணக்காடு, நெல்லியடிக் காடு, சாணாக்கரை, பேராவூரணி பகுதி 1, பேராவூரணி பகுதி 2, சொர்ணங்காடு பகுதிகளில் கூடுதல் வருவாய் கிராமமான படப்பனார்வயல், முடப்புளிக்காடு1 பீட், வீரக்குடி ரெட்டவயல், உக்கடை, கொரட்டூர், முடப்புளிக்காடு2 பீட் , ஆண்டார் கோட்டை, ரெங்கநாயகி புரம், சித்தாதிக்காடு, பனஞ்சேரி, வலப் பிரமன் காடுஆகிய பகுதிகளில் வருவாய் தீர்ப்பாயம் பசலி 1435 பொதுமக்களிடம் இருந்து வருவாய் துறை தொடர்பான 393 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வருவாய் தீர்ப்பாயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் சீரான அளவில் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், மழைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய் தீர்வாயம் மற்றும் குடிகள் மாநாட்டில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, அனைவருக்கும் உரிய முறையில் பதில் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் 1435 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் வருவாய் துறை சார்பில் குடிகள் மாநாடு தினத்தன்று 22 நபர்களுக்கு உடனடியாக தீர்வாக இணையவழி பட்டாக்களையும், குடும்ப அட்டைகள் 4 எண்ணிக்கையும், 4 நபர்களுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவு ஆணைகளையும் நெற்பயிற் நுண்ணூட்டம் 2 நபர்களுக்கும் ஆக மொத்தம் 32 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், உதவி இயக்குனர் (நில அளவை) வேங்கட கிருஷ்ணன், பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



