தஞ்சாவூர், ஏப்ரல் 7 –
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் திருவிடை மருதூர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், கும்பகோணம் தொகுதியில் பாமக வேட்பாளர் ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின், பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் துரை. சண்முக பிரபு, திருவையாறு தொகுதியில் அமமுக வேட்பாளர் வேலு கார்த்திகேயன், தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன், பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சேகர், திமுக வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர், பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் என். அசோக் குமார், அதிமுக வேட்பாளர் கோவி. இளங்கோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாவட்டத்தில் மொத்தத்தில் திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் 25 பேரும், கும்பகோணம் தொகுதியில் 29 பேரும், பாபநாசம் தொகுதியில் 27 பேரும், திருவையாறு தொகுதியில் 24 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 40 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 23 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 20 பேரும், பேராவூரணி தொகுதியில் 23 பேரும் என மொத்தம் 211 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


