தஞ்சாவூர், ஜூலை 9 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகளுடன் அம்பாளின் சேனை தலைவியாக போற்றப்படும் வராகி அம்மனும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
வராகி அம்மனுக்கு ஆண்டுதோறு ம் ஆஷாட நவராத்திரி விழா சிறப் பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 13-ஆம் தேதி தொடங்கு கிறது. அன்று கணபதி ஹோமம், கணபதி அபிஷேகமும் வராகி அம்மன் சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது .பின்னர் அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
14ம் தேதி மஞ்சள் அலங்காரமும் 15ஆம் தேதி குங்கும அலங்காரமும் 16ஆம் தேதி சந்தன அலங்காரமும் 17ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும் 18ஆம் தேதி மாதுளை அலங்காரமும் 19ஆம் தேதி நவதானிய அலங்காரமும் 20 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும்21 ஆம் தேதி கனிவகை அலங்காரமும் 22 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் 23ஆம் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை எட்டு மணி முதல் 10:00 மணி வரை வராகி ஹோமம் காலை 10 மணி முதல் 11 மணி சிறப்பு அபிஷேகமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
18ஆம் தேதி பஞ்சமி தினத்தையொட்டி காலை பஞ்சமி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினர் சார்பில் பிரசாத ம் வழங்கப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான 23ஆம் தேதி தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், ஜென்டை வாத்தியம் வாணவேடிக்கை ஆகியவற்றுடன் வராகி அம்மன் நான்கு ராஜ வீதி களில் திருவீதி உலா நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அரங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சுந்தர் ராசு, கண்காணிப்பாளர் ரவி மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



