தஞ்சாவூர், ஜூன் 11 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு வரன்முறையில் திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைக்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார். முரசொலி எம்.பி, விஜய் சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டத்திற்குட்பட்ட 14 குடும்பத்தினர்கள் பல வருடங்களாக பட்டாயின்றி வசித்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த 14 குடும்பத்தினருக்கும் தலா 3 சென்ட் வீதம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒப்படைக்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட கலெக்டர் ரேவதி, முரசொலி எம்பி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



