தென்தாமரைகுளம், மார்ச் 9 –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பின் (பதிவு எண் ற்றி. யு. 00186/2026) நாகர்கோவில் மண்டலம் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், கௌரவத்தலைவர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 10 வருடமாக டி. ஏ. அரியர் மற்றும் 2013, 2016, 2019, 2023 செட்டில்மெண்ட் மற்றும் இதர பணபலங்களையும் உடனே வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தின் வாயிலாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



