சென்னை, ஆகஸ்ட் 04 –
உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை சென்னை துரைப்பாக்கம் ஒ.எம்.ஆர் சாலையில் திறந்துள்ளது.
இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், துரைபாக்கம் – ஒ.எம்.ஆர் ஷோரூமின் கிளை துணைத் தலைவர் ரிஜாஸ் சாஹிம் உள்ளிட்ட மேலாண்மை உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஷோரூமில் திறப்பு விழாச் சலுகைகளாக தங்கம், அன்கட், மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடியும் மற்றும் வெள்ளி பொருட்ககளின் விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடியும் பெறலாம்.



