சென்னை, ஜூன் 19 –
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 140 வது வார்டு குமரன் காலனி 1-வது தெரு, கருணாநிதி 1-வது தெரு, கோவிந்தன் தெருவில் ரூ. 4 கோடி 48 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 10 வது மண்டலக்குழுத் தலைவர் எம். கிருஷ்ண மூர்த்தி, 140 வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீதரன் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்கள் திமுக மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.