அரியலூர், மே:06
அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி செந்துறை ஒன்றியத்தில் காவல் நிலையத்தில் எதிரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் தமிழகம் முழுவதும் கோடை கையில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி அரியலூர் மாவட்டத்தின் தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட தொண்டரணி தலைமை சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட தலைவர் M. சிவா தலைமையேற்று துவக்கி வைத்தார். தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டர் அணி தலைவர் S. மோகன்ராஜ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



