ராஜாக்கமங்கலம், செப்.12:
நாகர்கோவில் மாநகர 45-வது வார்டுக்குட்பட்ட மறுகால்தலைவிளை அருள்மிகு சிவ சுடலைமாட சுவாமி திருக்கோவில் கொடை விழாவையொட்டி சுமங்கலி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலீஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுமங்கலி பெண்களுக்கு பூஜை பொருட்களை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் ஊர் தலைவர் சதீஷ், தவெக வட்ட செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் மணிகண்டராஜ், அஜின், லிங்கேஷ், ராஜேஷ், குமரி மாவட்ட இந்து நாடார் சங்க செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



