சுசீந்திரம், ஏப். 30 –
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் ஏழை பக்தர்களுக்கும் அன்னதான வசதி செய்வதற்காக அரசு அன்னதானத் திட்டம் கொண்டு வந்தது. அதன்படி சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் ஒரு அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல நேற்று அன்னதான உண்டியல் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஆய்வாளர் சுதா, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியலை திறந்து எண்ணினர். இதில் 75 ஆயிரத்து 350 அன்னதானத்திற்கு வருவாயாக கிடைத்துள்ளது.


