சுசீந்திரம், ஆக. 11 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் வடக்கு பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு வருடம் தோறும் ஆடி மாதம் கடைசி திங்கள் அன்று புஷ்ப அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆடி கடைசி திங்கள் என்பதால் மாலை 6 மணி அளவில் சிவன் பிரம்மா விஷ்ணு உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்ப அபிஷேகம் நடைபெறும்.
6.30 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வாடாமல்லி, கிரேந்தி தவிர்த்து வாசனை பூக்களால் ஆஞ்சநேயரின் கழுத்து வரை பூக்களால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. பின்பு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாரதனையும் வரும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. பூ அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் வாடாமல்லி, கிரேந்தி தவிர்த்து பூக்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த அபிஷேகத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள்.



