சுசீந்திரம், மார்ச் 3 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் நேற்று மாசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சுவாமிக்கும் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. அதனை முன்னிட்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வந்த விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் காலை மற்றும் மாலை வேளையில் சிங்க வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு வாகனம், கமல வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் நான்கு ரதவீதியை வலம் வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று காலை அறம் வளர்த்த நாயகி அம்மனை ஊர்வலமாக பறக்கை காசி விஸ்வநாதர் கோவில் கொண்டு சென்று அங்கு நீராடி அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஆசிரமம் விநாயகர் கோவில் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது.
பின்பு அறம் வளர்த்த நாயகி அம்மனை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக தாணு மாலையசுவாமி கோவில் ரத விதியை சுற்றி கோவில் உள் உள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமி கையில் உள்ள திருமாங்கல்யம் அற வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் அர்ச்சதகர்கள் மந்திரம் ஓத மேளதாளங்கள் முழங்க கட்டப்பட்டு திருமங்கல வைவாகமும் நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், கயிறு, மஞ்சள், சந்தனம், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டனர்.
9 ஆம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம் தோறும் மாலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை தேரோட்ட நிகழ்ச்சியினை மாற்றி காலை 8 மணி அளவில் அறம்வளர்த்த நாயகி அம்மன் இந்திரன் தேராகிய சப்பர தேரில் வைத்து பக்தர்கள் தேறி படம் தொட்டி ரத விதியை ஒரு முறை சுற்றி வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று சந்திர கிரகணம் என்பதால் மதியம் முதல் இரவு ஏழு முப்பது மணிவரை கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. பின்பு சுவாமிகளுக்கு சந்திர கிரகண பரி கார பூஜைகள் செய்து கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பின்பு அறம்வளர்த்த நாயகி அம்மன் ரத வீதியை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இனண ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலையசுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.



