திருப்பூர், ஆக. 26 –
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து நான்கு இடங்களில் மேற்கூரை அமைக்கும் பணி ரூபாய் ரூ. 104 இலட்சம் மதிப்பீட்டிலும், புதிதாக அமைக்கப்படவுள்ள உயர்மட்ட நிழற்கூரை பணிகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு. நாகராசன், பகுதி கழக செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, உசேன், தம்பி குமாரசாமி, நந்தகோபால், பி.ஆர். செந்தில் mc.35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்து, 49 வது வட்டக் கழக செயலாளர் மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



