தென்காசி, செப். 16 –
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் நகர திமுக சார்பில் செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, டைட்டஸ் ஆதித்தன், சுற்றுச்சூழல் அணி ஜலால், தொண்டரணி ராஜவேல் ரத்தினம், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, காளிசாமி பாண்டியன், வர்த்தகர் அணி ரகுமான் மற்றும் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



