கோவை, அக். 14 –
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் ரூ.33.63 கோடி மதிப்பீட்டில் திருக்கோயிலின் மலை மேல் மற்றும் அடிவாரத்தில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்தத அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்க விழா காணொளி காட்சி வாயிலாக கட்டுமான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மேயர் ரங்கநாயகி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம. சண்முகசுந்தரம், மருதமலை தர்க்கார் ஜெயகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ச. குப்புசாமி, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, பொதுச்செயலாளர் CTC துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், வட்டகழக செயலாளர்கள் தெய்வம் மகாலட்சுமி,
வேலுச்சாமி, விஸ்வநாதன் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் மகேஷ் குமார், ராஜ்குமார், சுரேஷ் கனகராஜ், செந்தில்குமார், மகளிரணி நிர்வாகிகள் சின்னதங்கம், அனிதாசெல்வி, அனுஷ்யா குமாரசாமி, ஜேம்ஸ் வேலுச்சாமி, சதாசிவம், சின்னசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



