By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
கனஂனியாகுமரி

குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை

Last updated: September 16, 2025 4:27 pm
September 16, 2025
23 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 16 –

குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்தவர் அஜிகுமார் மனைவி ரமணி (41). பி.எஸ்.சி., பி.எட். படித்த இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அஜிகுமார் இறந்து விட்டார். இந்தநிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமணி உயிரிழப்பதற்கு முன்பு எழுதி வைத்த 6 பக்க உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அதில், “எனது கணவர் இறந்த பிறகு அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கருணை மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்த எனது செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதனை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். இந்த நம்பிக்கையால் அவர் என்னிடம் கேட்ட நகை மற்றும் பணத்தையும் கொடுத்தேன். சத்தியமாக உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குறுதியும் அளித்தார். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை மணமுடித்தார். இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பு ரமணி எழுதிய உருக்கமான கடிதத்தில், தன்னுடைய தந்தை, மகளிடம் மன்னிப்பு கேட்டும் எழுதியுள்ளார். அதில், “அப்பா, எனது பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என் இறப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்கள் என்று அதில் ரமணி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது இந்த கடிதத்தை உண்மை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை ரமணிதான் எழுதியுள்ளாரா? என்பது உறுதி செய்ய ஆய்வு நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ரமணி கடிதத்தில் கூறி இருந்த அரசு அதிகாரியிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று ரமணியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா

October 18, 2024
45 Views
மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
தருமபுரியில் 100 மாணவிகளுக்கு இலவச கல்வி; பச்சமுத்து கல்வி குழுமத்தின் தலைவர் அறிவிப்பு
ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
14 வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account