சுசீந்திரம், ஜுன் 19 –
பறக்கை அருகே உள்ள கக்கன் புதூர் ஊரைச் சார்ந்தவர் பால்சாமி (68). இவர் கூலி வேலை செய்து வருகிறார் கடந்த 13 ஆம் தேதி பறக்கை ஜங்ஷனுக்கு சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டின் அருகே உள்ள ஓடையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அதனைப் பார்த்த மற்றவர்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் அவரது மனைவி பால்சாமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.