கிருஷ்ணகிரி, செப். 18 –
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20.09.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான இரத்த பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, x-Ray, ECG, ECHO, Ultra Sound, கண் பரிசோதனை மற்றும் மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணர்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், இம்முகாமில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்படுகிறது. இலவசமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை தொழிலாளர்களுக்கு அனைத்து உடல் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மற்றும் இம்முகாமில் தொற்று நோய், உயர் இரத்த அழுத்தம், கண் பார்வை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இதய பரிசோதனை மற்றும் நரம்பியல் சித்த மருத்துவம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



