கிருஷ்ணகிரி, ஆக. 26 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, மயிலாப்பூர் சூசையப்பர் தொடக்கப்பள்ளியில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி, புனித அன்னாள் அரசு உதவிப்பெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் விரிவாக்கம் செய்து பள்ளி மாணவிகளுக்கு உணவை வழங்கி மாணவியர்களுடன் உணவருந்தினார். உடன் நகரமன்ற தலைவர் பரிதா நவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



