நாகர்கோவில், அக். 6 –
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட புங்கரை பகுதியில் நேற்று காரில் குடும்பமாக வந்தவர்களை மத்திக்கோடு கோத்திரி விளை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகன் கெர்ஷேன் (20), மூலச்சல் புது காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் டெர்ஜின் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் வினித் (23) ஆகிய மூன்று பேரும் வழி மறித்து அடித்து தகராறில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின்படி தக்கலை உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தகராறில் ஈடுபட்ட கெர்சன் மற்றும் டெர்ஜின் ஆக இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



