தென்காசி, ஜூலை 15 –
தென்காசி மாவட்டம் தென்காசியில் பெருந்தலைவர் காமராஜர் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தென்காசி கோவில் வாசல் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தென்காசி தொகுதிக்குட்பட்ட முக்கிய நகரம், கிராமங்களில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வட்டாரத் தலைவர்கள் கதிரவன், பெருமாள், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, ரஃபீக், சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.