களியக்காவிளை, பிப். 17 –
களியக்காவிளை அருகே மேக்கோடு, பனிச்சகுழி பகுதியை சார்ந்தவர் ஜான்றோஸ் மகன் டேவிட்ராஜ் (45). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் சம்பவத்தன்று புளிய மரத்தில் புளி பறிக்க மரத்தில் ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்துள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு பாறசாலை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிட்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிட்சை அளித்தனர். சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


