குளச்சல், அக். 14 –
கல்குளம் வட்டத்திற்குட்பட்ட குளச்சல், நெய்யூர் நியாயவிலைக்கடைகள் மற்றும் உடையார்விளை உணவு கிட்டங்கியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நியாயவிலைக்கடைக்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகள், குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை கேட்டறியப்பட்டது. குடும்ப அட்டைத்தாரர்கள் விரல் ரேகை பதிவு செய்வது நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரேசன்பொருட்கள் வழங்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து உடையார்விளை உணவு கிட்டங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கிட்டங்கியின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குகேற்ப ஒரு மாத பொருட்களான அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்து சரியான எடைகளில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்க துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இருப்பு பதிவேடுகள், ஊழியர்களின் வருகைப்பதிவேடு, கிட்டங்கியின் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்பட்டது. என கலெக்டர் கூறினார்.



