ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 15 –
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் “பசுமைப்படை” மாணவர்கள் சார்பில்
வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி துணைத் தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஏ. ராஜா, பல்கலைதுணைத் தலைவர் சசி ஆனந்த் இணைந்து தெற்கு ரத வீதியில் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
காவல் ஆய்வாளர் பி. முத்துக்குமார், துணை ஆய்வாளர் தர்மராஜ், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் எஸ்.பி. பாலக்கண்ணன் கலந்து கொண்டனர். 500 மாணவர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் சென்று மாசுபடுதல், வெப்பமயமாதல் தீமைகள் பற்றி விவரித்து மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர். கே. செல்வராணி மற்றும் மாணவர்கள் பேரணியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



