ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மண்டல அளவிலான வடமேற்கு மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் 29.04.2024 காலை 10 மணியளவில் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கோ.முரளீதரன் தலைமை தாங்கினார். முன்னதாக வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார்.
எதிர்கால திட்டங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் ஓய்வூதியர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து மாநில துணைத்தலைவர் நிலவு குப்புசாமி, பேசினார்.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் து.துரைமணி, செயலாளர் பி.அச்சதன், பொருளாளர் சி.எஸ்.இராஜா, இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மு.சண்முகம், செயலாளர் எ.அப்துல்ரஹீம் பொருளாளர் கே.ஆறுமுகம், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர்கள் கோபால இராசேந்திரன், எ.சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வேலூர் மாவட்ட அமைப்பாளராக செ.நா.ஜனார்த்தனன் வட்டார அமைப்பாளர்களாக காட்பாடி ச.சச்சிதானந்தம், வேலூர் குணாளன், குடியாத்தம் எம்.ஆர்.மணி, கே.வி.குப்பம் கோபால இராசேந்திரன், கணியம்பாடி சி.கோகுலதாசு, அணைக்கட்டு எம்.சேகர், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் மாநில மையத்தின் சார்பில் ரசீது புத்தகங்கள் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப் அன்னையா, வாலாஜா வட்டார தலைவர் ஆர்.முனிரத்தினம், சோளிங்கர் வட்டார தலைவர் பொன்னுரங்கம், த.குமார், எம்.பாண்டுரெங்கன், வி.பாலச்சந்தர்.ஒய்.மேஷாக்ஶ்ரீதர் உள்ளிட்ட இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட உறுப்பினர்கள் பலர் பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
ஓய்வூதியம் 70 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு 10% அடிப்படை ஓய்வூதியர்தில் உயர்வு வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களுக்கு செலவினத்தை அரசே ஏற்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த கோருவது என தீர்மானிக்கப்பட்டது
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டுரெங்கன் நன்றி கூறினார்.
செ.நா.ஜனார்த்தனன் மாவட்ட அமைப்பாளர் 9443345667
படவிளக்கம். ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் பேசியபோது எடுத்தப்படம் உடன் மாநிலத்தலைவர் கோ.முரளீதரன், துணைத்தலைவர் நிலவு குப்புசாமி, வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டுரெங்கன் உள்ளிட்டோர்
ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல கூட்டத்தில் மாநிலத்தலைவர் கோ.முரளீதரன், பேசியபோது எடுத்தப்படம் உடன் மாநில பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் துணைத்தலைவர் நிலவு குப்புசாமி, வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டுரெங்கன்