ஓசூர், ஜூலை 6 –
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அந்திவாடி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி குப்புசாமி முயற்சியினால் உருவான பூங்காவை இன்று ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் ஓசூர் மாநகராட்சியும் TVS MOTOR COMPANY – SST சீனிவாசன் சர்வீஸ் ட்ரஸ்ட் நிறுவனமும் இணைந்து 20 லட்சம் நிதி உதவியுடன் புதியதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டவர்கள் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநகராட்சி துணை மேயர் சி.ஆனந்தய்யா உடன் இருந்து ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது.
பிறகு மரக்கன்றுகள் நட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிறகு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பாக்யலட்சுமி அண்ணாதுரை வருகை புரிந்த மேயர்,மற்றும் துணை மேயர்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். இதேபோல் அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மாமன்ற உறுப்பினர் பாக்யலட்சுமி அண்ணாதுரைக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் முகமது சபீர் ஆலம் மற்றும் TVS நிறுவனங்களின் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி TVS SST நிர்வாகிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. பாக்கியலட்சுமி அண்ணாதுரைக்கு
அம்பேத்கர் நகர், அந்திவாடி பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி அண்ணாதுரை, இந்தப் பகுதி பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஹரிஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் தியாகராஜன், மாவட்ட துணை தலைவி சரோஜா, விளையாட்டு அணி மாவட்ட தலைவர் பீட்டர் சத்யராஜ், வட்டாரத் தலைவர் கெலமங்கலம் சுந்தர்ராஜ், இளைஞரணி காங்கிரஸ் மாவட்டதலைவர் அனில்குமார், பிரபு, திமுக கழக ஓசூர் மாநகராட்சி தெற்கு பகுதி பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.



