ஈரோடு, மே 20 –
எஸ்எஸ்எல்சி தேர்வு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 247 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 396 பேரும் மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில் மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 1 ஆயிரத்து 214 பேரும் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டத்தில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.86 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.34 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.14 சதவீதம், இருபாலார் பள்ளிகளில் 94.42 சதவீதம், பெண்கள் பள்ளியில் 96.42, ஆண்கள் பள்ளியில் 88.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


