திருப்பூர், ஆக. 28 –
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டப்பணிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டம், .அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி கரைப்பாளையம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 வீடுகளை ஆய்வு மேற்கொண்டும். அவிநாசி சீனிவாசபுரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் உயிர் உரம் உற்பத்தி ஆலையில் இயந்திர உதவியுடன் தானியங்கி முறையில் 100 சதவீத தரத்ததுடன் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு 55,000 லிட்டர் உயிர் உரமானது உற்பத்தி இங்கு செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டும் கானூர் ஊராட்சியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மருதாச்சலம் என்ற விவசாயி தோட்டத்தில் தென்னை, வாழை, வெங்காயம் உயிர்ம விவசாயத்தில் விளைவித்தது குறித்து பார்வையிடப்பட்டது. மேலும், நடுவச்சசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்னையினையும், கருக்கன்காட்டுபுதூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தையும், புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.93 இலட்சம் மதிப்பீட்டில் கருவலூர் வீதியில் தரை தளத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடையினையும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் பழுது பார்க்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கருவலூரில் ரூ.6.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பணிகளையும், செம்பிய நல்லூர் ஊராட்சியில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் குள்ளகவுண்டன்பாளையம் முதல் கந்தம் பாளையம் வரை சாலை பலப்படுத்தும் பணிகளையும் சேவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார். இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (வேளாண்மை) பாமா மணி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயலட்சுமி, உதவி பொறியாளர்கள் குரு பிரசாத்,
செந்தில் குமார், செய்தியாளர்கள் மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



