திருப்பூர், செப்டம்பர் 15 –
அகில பாரத இந்து மகா சபா சார்பாக மாநில இளைஞரணி தலைவர் திருப்பூர் மாவட்ட தலைவர் G. வல்லபை பாலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கொங்கு மண்டல இளைஞர் அணி துணை தலைவர் வேங்கை கணேஷ், செயலாளர் ருத்ரா, மாவட்ட செயலாளர் அருண் குமார், ரஞ்சித், ஏழுமலை, குணா, ஆண்டோனி, லோகேஷ், கலை, அவிநாசி நகர தலைவர் விஜயகுமார் மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



