நாகர்கோவில், ஜன. 26 –
நாகர்கோவில் அருகே உள்ள உசர விளை பகுதியை சேர்ந்தவர் கணேச பெருமாள் மகன் அனந்தகிருஷ்ணன் (20). இவர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
ஈத்தங்காடு நான்கு வழிச்சாலை இணைப்பு சாலையில் வரும் போது நாகர்கோவில் கன்னியாகுமரி சாலையில் வேகமாக வந்து வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் ஆனந்த கிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தென்தாமரை குளம் போலீசார் கார் டிரைவர் மெல்வின் 31 என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


