May 26, 2025,
விவரமான செய்தி (Based on UN News):
https://news.un.org/en/story/2025/05/1163646
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னிட்டு ஐ.நா.வில் முக்கிய ஆயத்த அமர்வு
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள் தீர்வை அடைய உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை ஆதரிக்க, ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஐ.நா. உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த அமர்வில், மாநாட்டின் முடிவுகளை வடிவமைக்கும் எட்டு முக்கிய கருப்பொருள் (Key Themes) வட்டமேசை விவாதங்களுக்கு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டது. அதனூடாக எதிர்பார்ப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பிலிமோன் யாங் இந்த சந்திப்பின் போது உரையாற்றியபோது,
“19 மாதங்களுக்கும் மேலாக காசாவில் நாம் கண்ட கொடூரங்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டு செல்லும் அவசரத் தேவையை வெளிப்படுத்துகின்றன.
மரணம், அழிவு மற்றும் இடப்பெயர்ச்சியின் பேரழிவை நாம் தொடர அனுமதிக்கக் கூடாது,”
என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த மோதல் எந்தவொரு நிரந்தரப் போர் அல்லது முடிவில்லாத ஆக்கிரமிப்பு வழியாக தீர முடியாது. இது முடிவடைய வேண்டுமென்றால், இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும், தங்கள் சொந்த சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளில், அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் அருகருகே வாழ வேண்டியது தான்.”
இந்த செயற்திட்ட ஆலோசனைகள், ஜூன் மாநாட்டின் நேர்த்தியான முன்னோட்டமாகவும், இரு நாடுகள் தீர்வுக்கான தொடர்ச்சியான உலக ஒத்துழைப்புக்கு ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
Source: UN News Org – Summary based on recent diplomatic developments at UN HQ, New York


