மார்த்தாண்டம், அக். 21 –
இரையுமன்துறை கடற்கரை பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் கடல் அரிப்பு தடுப்புசுவர் அமைக்கும் பணிகளை நேற்று (20.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.35 கோடி மதிப்பில் இரையுமன்துறை மீனவ கிராமம் முதல் நீரோடி மீனவ கிராமம் வரை இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இணைப்பு சாலை கடல் அரிப்பினால் பாதிக்கப்படாதவாறு ஆங்காங்கே கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டு வரும் பணிகளும் நடக்கிறது. இவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது.
பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார். நடைபெற்ற ஆய்வில் துணை இயக்குநர் மீன்வளத்துறை திரு.சின்ன குப்பன், மீனவ பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



