நாகர்கோவில், மே 26 –
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, இரணியல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இரணியல் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.
பண்டாரக்காடு பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் சபிந்திரன் (46) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இரணியல் போலீசார் வழக்கு பதிந்து சபிந்திரனை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.



