கோவை, ஜூன் 22 –
கோவை மருதமலை சாலை ஐஓபி காலனி பகுதியில் இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி 25-7-26 தேதியில் நடைபெறுவதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூறியதாவது; கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளம். அந்த அடையாளத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகத் திகழ்பவர்கள் நம் இசைக்கலைஞர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பல திறமையான கலைஞர்கள் இன்று முறையான வருமானம் இன்றி, வறுமையில் வாடி வருகின்றனர்.
இந்த இசை உன்னத நோக்கத்துடன் நாங்கள் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, “இசையால் கலைஞர்கள் வாழ்வினை காப்போம்” என்ற “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி முழுமையாக நலிந்த நிலையில் உள்ள இசைக்கலைஞர்களின் மருத்துவச் செலவுகள், கல்வி உதவி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறினர்.



