நாகர்கோவில், மே 28 –
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா, மகேந்திரகிரி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆரல்வாய்மொழி குமாரபுரம் சாலையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3 ம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களான விவேக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சனைகள் காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஜெகன் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த விவேக் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஜெகனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து ஜெகன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


