தஞ்சாவூர், ஜூலை 29 –
அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை என்று தஞ்சாவூரில் நைனார் நாகேந்திரன் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார் மாவட்ட பார்வையாளர் முரளி கணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உமாபதி, கர்ணன், மாநில என் ஜி ஓ பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக மேலிட பார் வையாளர்கள் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நிர்வாகிப்பூண்டி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக பாஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், நாங் கள் அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் இணைந் து ஆட்சியில் பங்கேற்றுள்ளன. இதனால் திமுக தற்போது தனித்து விடப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும், இருப்பினும் சட்ட சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் அகில இந்திய தலைமையின் வலியுறுத்தலின்படி 27 தொகுதியி ல் போட்டியிட்டோம். ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் பொருத்த மானவை அல்ல, இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மதித்து போட்டியிட்டோம். தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றோம் அண்ணாமலை பிரிந்து சென்ற தால் பாஜகவில் வெற்றிடம் ஏற்படவில்லை.
பிரதமர் மோடி 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, இந்தியாவை உலக பொரு ளாதாரத்தில் 4வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் உலக நாடுகள் வியந்து பார்க்கும் தலைவராக மோடி திகழ்கிறார். அண்ணாமலை சென்றாலும் நைனார் நாகேந்திரன் பதிவி மாறினாலும் யாரும் கட்சி விட்டு செல்ல மாட்டார்கள். நான் ஜெயலலிதாவுடன் இருந்தவன் என்பதால் ஒரு அரசியல் கட்சி உருவாக்க எவ்வளவு செலவு சக்தியும் தேவை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களின் நேரில் சந்திப்பதில்லை. மேலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருகிறார். இந்த நிலை நீடித்தால் இந்து சமுதாயத்திற்கு பாதுகாக்கப்பட்ட சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.



