சேலம், ஜூன் 21 –
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அசிம் பிரேம்ஜி ஈக்விடியை அறிவித்துள்ளது. முதுகலை மருத்துவர்களுக்கு 18 மாத தீவிரமான கற்றல் அனுபவம் முதுகலை மருத்துவர்களுக்காக வழங்குகிறது. இந்த பெல்லோஷிப் முயற்சியானது அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 11 உயர் மருத்துவ கல்வி மையங்கள் வழங்க உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் வாழும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக மருத்துவ சேவை புரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு மருத்துவ பயிற்சியை இளம் மருத்துவர்கள் பெறுவதோடு சமூகத்தில் இணைந்து பணியாற்றும் அனுபவமும் கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் சேரும் மருத்துவர்கள் களத்தில் பணிபுரிவதன் மூலம் மதிப்பு மிகு கள அனுபவத்தை நேரடியாக பெறுவர். மருத்துவ வசதி அனுவருக்கும் கிடைப்பதில் உள்ள சவால்களை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவ தீர்வுகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுடன் இணைந்து வழங்கும் வாய்ப்பு நீடித்த மாற்றத்தை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.