நாகர்கோவில் மார்ச் 9
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ரூ.1,000 கட்டணத்தில் ஒரு மாதம் எங்கு வேண்டுமானாலும் அரசு பேருந்தில் பயணம் செயயும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சலுகை பயண திட்டத்தை அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி சீட்டு பெற்றால் ஒரு மாத காலத்துக்கு குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும், குளிர்சாதன வசதி பேருந்துகளை தவிர்த்து பயணம் செய்யலாம்.
1,000 ரூபாய் கட்டண சீட்டை நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய முன்பதிவு மையம், அண்ணா பேருந்து நிலைய சீஸன் டிக்கெட் பெறும் கவுன்ட்டர், திங்கள்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய 4 பேருந்து நிலையங்களிலும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர்களிடம் பெற்றுக்கொண்டு பயணிகள் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.