பரமக்குடி,நவ.20: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பெருங்கரை ஊராட்சியில் உலக கழிப்பறை தின பிரச்சார கூட்டம் துவக்க விழா நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் வரும் கிராமங்களில் 19.11.2024 முதல் 10.12.2024 முடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிநேற்று முதல் தொடங்கியது. நேற்று பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பெருங்கரை ஊராட்சியில் தொடங்கியது.
ஊராட்சி மன்ற தலைவர்முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தூய்மை பாரதம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் உரையாற்றினார், இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சிகளிலும் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு குறித்து, புதியதாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுத்தல் ,கழிப்பறை கணக்கெடுத்தல், பழைய சமுதாய கழிப்பறைகளை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்துவது, சிறந்த கழிப்பறை பயன்பாட்டு குழுவை கௌரவப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இறுதியில், பெருங்கரை ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.
பட விளக்கம்
உலக கழிப்பறை தினத்தையொட்டி பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பெருங்கரை கிராமத்தில் கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.