திருப்பூர் ஆக.8
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மைய அலுவலக வளாகத்தில் ரோட்டரி செலிப்ரேஷன் மற்றும் தெற்கு ரோட்டரி இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், குமரன் மெடிக்கல் சென்டர் பணியாளர்கள் மற்றும் குமரன் நர்சிங் மாணவிகள் என மொத்தம் 450 பேர் கலந்து கொண்ட இந்த மாபெரும் பேரணியை
மாநகராட்சி துணை மேயர்
ரா. பாலசுப்பிரமணியம் முன்னிலையில்
ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது
57வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் நே.கவிதா நேதாஜி கண்ணன்.
சாந்தாமணி உட்பட தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.