வாணியம்பாடி:மே:23, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வனத்துறை, வேர்கள் அறக்கட்டளை மற்றும் பூமி நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பல்லுயிர் பெருக்க நாள் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் கோ க்ரீன் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார், பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை குறித்தும் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உரையாற்றினார் மேலும் உலக பல்லுயிர் பெருக்க நாள் கருப்பொருளான “இயற்கையுடன் இணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி” குறித்து வனச்சரக அலுவலர்கள் சோழராஜன் மற்றும் பாபு ஆகியோர் விளக்கினார்கள்
நீர்நிலைகளை காப்பதன் அவசியம் குறித்தும் பல்லுயிர் சூழலில் மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் பூமி நிறுவனம் ஞானசூரிய பகவான், பல்லுயிர் பெருக்கத்தை காப்பதன் அவசியம் குறித்தும் மரங்களை நட்டு வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் வடிவேல் சுப்பிரமணியன் உரையாற்றினார்
நிகழ்வின் முடிவில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் இன்பவள்ளி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது
இந்நிகழ்வில் வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் சார்ந்த வன அலுவலர்கள் சம்பத்குமார் வெங்கடேசன் சங்கர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.