நீலகிரி. மார்ச்.15.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மைனலை அரக்காடு பகுதியில் மனநலம் பாதித்த அஞ்சலையம்மா என்ற பெண் தேயிலை தோட்ட பகுதியில் தனியாக சென்று கொண்டு இருந்தபோது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வீட்டில் வளர்ப்பு பிராணிகளை நாய் ஆடுகளை அடித்துக் கொன்ற புலி அதே பகுதியில்வசிக்கும் கோபாலன் என்பவரது மனைவி நேற்று இரவு மனநலம் பாதித்தவர் என கூறப்படும் அஞ்சலையம்மா 60. என்ற பெண்ணை தாக்கி கொன்றுள்ளது. காலையில் அப்பகுதி தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் புலித்தாக்கி பாதி உடலை சாப்பிட்ட சடலத்துடன் கிடந்த அஞ்சலையம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பகுதி எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து புலி சாப்பிட்ட பாதி உடலை பிணக்கூராய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மனித உடலை சாப்பிட்ட புலி மீண்டும் மனிதர்களை தாக்கும் என்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வனத்துறையின் உத்தரவுப்படி அப்பகுதியில் புலியை பிடிப்பதற்கு கூண்டு வைத்ததோடு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை புலியால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தால் அப்பகுதிக்கு தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அச்சத்துடன் உறைந்துள்ளனர்.