கிருஷ்ணகிரி மாவட்டம், ஏப்ரல் 21
ஊத்தங்கரை வட்டம் கல்லாவி விஷ்டம் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான M ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக வித்யா மந்திர் கல்வி நிறுவனர் M சந்திரசேகர் கல்லாவி காவல் ஆய்வாளர் A S ஜாபர் உசேன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகளின் கவிதை, கட்டுரை, சிறுகதை, சிலம்பம், யோகா,நடனம் போன்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், 100% பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்தி பிரச்சார சபா நடத்தும் பரிச்சையா தேர்வில் முதலிடம் பிடித்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 110 பேருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசினையும் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா அறிவகம் தாளாளர் சையத் பால மந்திர் தாளாளர் காமராஜ் கிரசன்ட் பள்ளி தாளாளர் நூர்ல ஷெரிஃப் கல்லாவி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பற்குணன் , கல்லாவி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் காட்டுப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள் மற்றும் பள்ளியின் சிறப்பு விருந்தினர்களான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்