தஞ்சாவூர் மே.19.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர். என்.ரவி பேசினார்.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சதங்கை நாதம் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது
ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக் கும் கலாச்சார தலைமையாக தஞ்சாவூர் இருந்தது .இந்த மாவட்ட த்தில் இருந்து கலை, இலக்கியம், இசை உள்ளிட்ட வற்றில் மிகச்சிறந் த கலைஞர்கள் உருவாகினர் இதனால் தான் இங்கு மண்டல பண்பாட்டு மையம் தொடங்கப் பட்டது
சுதந்திரப் போராட்டத்தின் போது நாடு முழுவதும் மக்கள் இணைந்து விடுதலைக்காக போராடினர் .இந்த இணைப்பு கலாச்சாரத்தால்தான் உருவானது. சுதந்திரத்திற்கு பிறகு நாம் பாரதிய அரசியலை உருவாக் காமல் ,மேற்கித்திய அரசியலைப் பின்பற்ற தொடங்கியது. துரதிருஷ்டவசமானது. அதிகாரத் தை அடைவதற்காக இந்த மேற்கித்திய அரசியல் பின்பற்றப் படுகிறது .இதனால் ஜாதி, மதம், மொழி உள்ளிட்ட வற்றால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்
அரசியல் தலைமையகமான சென்னை வளமாக இருக்கிறது ஆனால், கலாச்சார தலைமையக மான தஞ்சாவூர் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூறுகிறது. ஆனால், தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க என்ன செய்தன? கலை யை புறக்கணித்தது மட்டுமல்லா மல், கலாச்சாரமே அரசியலாக்க
ப்பட்டது
கலாச்சாரம் நம்மை இணைத்து இருந்தாலும். அதை அரசியல் பிரிக்கிறது. கலாச்சாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது. சில கலை நிகழ்ச்சி களை நடத்தி, கலைஞர்களை அழைத்து பயணப்படி உள்ளிட்ட வற்றை மட்டுமே அரசு வழங்கும். எனவே சமுதாயம், மக்கள் தான் புரவலர்களாக இருந்து கலைகளு க்கு ஆதரவ அளிக்க வேண்டும் இதன் மூலம் கலை ,பண்பாடு செழித்தோங்கும் என்றார் ஆளுநர்.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிமலை சிற்பக் கலைஞர் தேவ .ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, பத்மஸ்ரீ விருது பெறவுள்ள தெருக்கூத்து கலைஞர் புரசை கண்ணப்ப சம்பந்தனை ஆளுநர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்
முன்னதாக தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கே கே கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நிர்வாக அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி



