ராமநாதபுரம், மே 2-
ராமநாதபுரம் பேராவூர் செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 6 ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆண்டு விழாவில் தலைமை வகித்தார். பள்ளி
முதல்வர் பார்வதி பிள்ளை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் டிஜிபி (ஓய்வு) சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, “மாணவ மாணவிகள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள தினமும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் படிக்க வேண்டும். மொபைல் போன் பார்ப்பதை விட வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் தான் ரோல் மாடல் எனவே பெற்றோர்கள் முதலில் சில திறன்களை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவ வேண்டும். குழந்தைகள் சிறந்த சாதனையாளராக வருவதற்கு வீட்டில் நல்ல சூழலை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல உறவு, நல்ல பழக்கவழக்கங்கள், நற்சிந்தனை, புத்தகம் வாசிக்கும் பழக்கம் போன்ற சிறந்த பழக்கங்களை உருவாக்கித் தந்தால் சிறந்த மாணவர்கள் உருவாகி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள், என்று பேசினார். பின்னர், பிளஸ்2, பத்தாம் ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்,
விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு
ருக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அப்துல்லா நினைவு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.
செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் | பொறியியல் தன்னாட்சி கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நாகலட்சுமி, செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் விசாலாட்ஷி , மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நடப்பாண்டு நிர்வாக அலுவலர் பெலிக்ஸ் நன்றி கூறினார்.



