தஞ்சாவூர் பிப்8.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் மகளிர் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். கல்யாணம் சுந்தரம் எம்பி ,எம்எல்ஏக்கள் துணை சந்திரசேகரன் ,டி கே ஜி நீலமேகம் ,அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சுப தமிழழகன் (கும்பகோணம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்
விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 885 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட் டர்கள் வழங்குவதற்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டு, இந்த விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது .மீதி உள்ள 100 பேருக்கு விரைவில் ஸ்கூட்டர் வழங்கப்படும் மக்களு டன் முதல்வர் நிகழ்ச்சியில் அரசின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் வைத்து மக்கள் மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதை சீரிய சிந்தனையுடன் செயல்படுத்தி வருகிறோம் .இவ்வாறு அவர் கூறினார்