By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
தூத்துக்குடிமாவட்டம்

ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்

Last updated: October 30, 2024 9:47 am
October 30, 2024
59 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் அரசு பணியாளர்களுக்காக நடைபெற்ற மருத்து முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களிடம் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விசைப்படகு உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு போன வகைக்கு இழப்பீடாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 பயனாளிக்கு ரூ.6 இலட்சத்திற்கான காசோலையினையும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் 11 நபர்களுக்கு ரூ.11 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்பவர் ஐரோப்பிய கண்டத்தின் மிக உயர்ந்த மலையான காகாசஸ் மலையை ஏறி சாதனை புரிந்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு
ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை
பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

களை இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை

August 21, 2024
111 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளல்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
வாலிபர் ஆட்டோ டிரைவரை தாக்கும் சிசிடிவி
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account