அரியலூர், ஜன;09
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் I.P.S., புதியதாக பதவியேற்று முதல் முறையாக குறைதீர்க்கும் மனு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி புதன்கிழமையான நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 11 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் I.P.S., அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்