சங்கரன்கோவில் மே. 12
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய திருநெல்வேலி நிர்வாக பொறியாளர் கனகராஜ், தென்காசி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன், உதவி நிர்வாக பொறியாளர் அர்ஜுன், இளநிலை பொறியாளர் கண்ணபிரான், உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோருடன் ராஜா எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய ராஜா எம்எல்ஏ கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு எந்த வித தடையும் இன்றி குடிநீர் முறையாக வழங்க வேண்டும் எனவும், பிற அரசுத்துறைகளான மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முறையான மின்சாரம் வழங்குவது, நெடுஞ்சாலைகளில் பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளை கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



